*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமார் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொகுத்த சிறுகதைத்தொகுதி வெளிவந்துவிட்டது விலை 240 ரூபாய்.தருமராசா அஜந்தகுமார் உயர்தரமாணவர்களுக்காய்த் தொகுக்கும் உரைநடைக்கோவை விரைவில் வெளிவருகிறது *

புதன், 15 ஜூன், 2016

     
                                  க.பொ.த உயர்தரம் 2016
                             தமிழ் மாதிரி வினாத்தாள் 1



அறிவுறுத்தல்கள்: பகுதி I இல் உள்ள இரு வினாக்களுக்கும், பகுதி II இல் உள்ளவற்றுள் எவையேனும் மூன்று வினாக்களுக்கும் எல்லாமாக ஐந்து வினாக்களுக்கு விடைதருக            
                                                        பகுதி I
1. மேல்வரும் செய்யுள்களை வாசித்து அவற்றின் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை தருக.
( ஐ)      பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
யாரீ ரோவென வினவ லானாக்
காரெ னொக்கற் கடும்பசி யிரலவ
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்றும்
உடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே.

அ) பாடலின் பொருளை இக்கால உரைநடையில் எழுதுக.
ஆ) தடித்த  எழுத்துக்கள் உள்ள பகுதிகளின் சிறப்பை எழுதுக.
இ) பாடாண்திணைமரபை இப்பாடல்வழி எடுத்துக்காட்டுக.
ஈ) இப்பாடலின் துறையை விளக்குக.
(II)      அலைபுறங் கொண்ட ஞாலத் தடரிருள் சீக்க யாக்கை
நிலைபுறங் கொண்ட ஞானநெடுஞ் சுடரனையான் போகக்
கொலைபுறங் கொண்ட  வேந்தன் குணத்துரி  நகரும் நாடும்
வலைபுறங் கொண்ட பாவ மலிந்திருள் மொய்த்தன்றே

கதிதள்ளி யுயர்வான் னேற்றங் கனிந்ததம் வேந்த னோடு
பதிதள்ளி  யமரர் போகப் பகையுநீண் பசியு நோயும்
நிதிதள்ளி மிடியுங் கேடு நிசிதமுந் தீயயாவு
மதிதள்ளி மருட்டும் பேயு மறுகுடி யாயிற் றன்றே

அ) இப்பாடல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தை விளக்குக.
ஆ) பாடல்களின் பொருளை  எழுதுக.
இ) நகரம்  அடைந்த துன்பத்தை விளக்குக.

2. 'அ'   பகுதியிலுள்ள கவிதையைப் படித்து அதன் கீழுள்ள வினாக்களுக்கு விடை தருக.
அல்லது
'ஆ'  பகுதியிலுள்ள உரைப்பகுதியைப் படித்து அதன் கீழுள்ள வினாக்களுக்கு விடை தருக.
(அ)
பத்தாத் திகதியில் சம்பளமாம் சின்னப்                              
பையனுக்கோ பெருங் கொண்டாட்டம்
'மொத்த மாக சம்பளம் வாங்கிடுவா அம்மா
முழுசா ஒருரூபா தந்திடுவா' என
சித்தம் நிரம்பிய ஆசையிலே தன்
தோழர் பலருக்கும் சொல்லி வைத்தான்
முத்தம்மா சம்பளம் வாங்கி வந்தாள் - அவன்
முதுகுல நாலு கொடுத்து வச்சாள்

வாழைப்பழம்... மிட்டாய், முறுக்கு வடை
வாங்குங்கிட வாங்குங்க என்று இந்த
ஏழைங்க காசைப் பிடுங்கிட வேவந்த
வியாபாரிகள் இடும் கூச்சல்களும்
ஊளை ஒழுக வாய் எச்சில் வடிய தன்
உள்ளத்தி லேபெரும் ஆசையுடன் - அம்மா
சேலை முந்தானையைப் பற்றிக்கொண் டேவரும்
செந்தா மரையோ சிணுங்கிடுவாள்

'சீவி முடிச்சி சிரிக்கலைன்ன, நல்லா
சிங்காரம் பண்ணி தளுக்கலைன்னா,
பாவிப்பய அரைப்பேருபோட்டான்? அவன்
பாடையிலே போக! மாடாக என்
ஆவி துடிக்கச் சுமந்து வந்தும், தினம்
அரைப் பேரு போட்டுல்ல வச்சிருக்கான்'
கேவி யழுது புலம்பிக் கொண்டே வரும்
குப்பாயி நெஞ்சில் பெருநெருப்பு

காமாச்சிக்கு எம்பத் தஞ்சிரூபா அவ
கையில பாத்தியாடி சுத்த
சோமாறி வேலைக்குப் போகமாட்டா, போனா
சொத்த வேலை, துப்புப் பட்டிடுவா
ஏமாளி கந்தன் அவ புருஷன் - அவ
இழுத்த இழுப்புக்கு வளையுறானே என
உரோமஞ் சிலிர்க்க வசைபாடும் - சின்ன
ருக்குமணிக்கோ, வயித்தெரிச்சல்

'சீட்டுப் பணத்த நான் கட்டுவேனா? பட்ட
சில்லற கடன அடைப்பேனா? அந்த
சேட்டுப் பயமலைபோல வந்து பெருந்
தொல்லை கொடுப்பான் கடன் கேட்டு,
ஈட்டுக் கடையில வச்ச நகையினை
இந்தமாசம் திரும்பலன்னா ஏலம்
போட்டுடுவானாம், என்ன செய்வேனென
புலம்பும் வள்ளிளொரு பக்கத்திலே


பள்ளிக்குடம் போகும் சின்ன மகளுக்கு
பாவாடை ரவிக்கை தைக்க வேணும்
வள்ளி, மகளின் சடங்குக்கு அஞ்சிரூ
வா, வாச்சும் மொய்யா எழுதிடணும்
கொள்ளைக்கா ரப்பய ஒத்த கடைக்கும்
கொடுத்திட னும்போன 'மாசக்கடன்'
உள்ளத்தில் எண்ணி அடுப்பரு கில் சும்மா
உட்கார்ந் திருக்கிறாள் பாப்பாத்தி


நாட்டுக்குப் போயி குடிச்சுப் புட்டு, சில
நாதாறிப் பசங்கள கூட்டிவந்து கரு
வாட்டுக் கறி வேணும் என்று, என்னையிந்த
மனுசன் புடுங்கியே தின்னப் போறான்
வீட்டுல என்ன சொகத்த கண்டேன்? இந்த
வெத்து மனுசன கட்டிக்கிட்டு என
நீட்டி முழக்கி வசைபாடும் சின்ன
நீலா வதிக்கோ பெருங் கோவம்


சம்பள நாளிது வீட்டி லிருக்கிற
சந்தோஷ மெல்லாம் பறந்திடும் நாள்
வம்பு தும்புகளும் பேசிடும் நாள், இவர்
மண்டை யுடைந்திடும் நாளிதடா!
கம்புத் தடிகளைத் தூக்கிடும் நாள், பொலிஸ்
கச்சேரி, கோட்டுக்குப் போயிடும் நாள்
வெம்பியழுதிடும் பெண்களின் குரல்கள்
வீடுகளில் கேட்கும் நாளிதடா!

அ) இக்கவிதையில் கூறப்படும் மலையகப் பெண்களின் ஏக்கங்கள் எவை?
ஆ) இக்கவிதை மூலம் வெளிப்படுத்தப்படும் அதிகாரத்தினரின் சுரண்டல்கள் எவை?
இ) கவிஞரின் எடுத்துரைப்பு முறைச் சிறப்புகளைக் கூறுக.
ஈ) 'சம்பள நாளிது வீட்டி லிருக்கிற சந்தோஷ மெல்லாம் பறந்திடும் நாள்'  என்று கவிஞர் ஏன் பாடினார்?
அல்லது


'நம்ப சாஸ்திரம் ..ஆசாரம்! அப்படின்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்? ...அப்போ நீ பால்குடிக்கிற குழந்தையடா...எனக்கு பதினைஞ்சு வயசுடா! என் கொழந்தை என் மொகத்தைப் பாத்துப் பேயப் பாத்ததுபோல்  அலறித்தேடா...!  பெத்த தாய்க்கிட்டே பால்குடிக்க முடியாம குழந்தை கத்துவே கிட்டே வந்தா மொட்டையடிச்சு என்னைப் பார்த்து பயத்துல அலறுவே...அப்படி என்னை என் விதிக்கு மூலையில உட்காத்தி வச்சாளே அந்தக் கோரத்தை நீ ஏண்டா பண்ணலை கீதாவுக்கு?....ஏன் பண்ணலை சொல்லு?' என்று கண்களில் கண்ணீர் வடியக் கேட்கும் போது கணேசையரும் கண்களைப் பிழிந்துவிட்டுக்கொண்டார். அவள் தொடர்ந்து பேசினாள்.

'ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர்ப்புடைவை கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்தீண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக் தானே சம்பாதிச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரீன்னேன் ஏன்? ...காலம் மாறீண்டு வரது மனுசாளும் மாறணும்னுதான்! நான் பொறந்த குடும்பத்தில எண்டு சொல்லறயே எனக்கு நீ இருந்தா..வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. கீதா பண்ணின காரியத்தை மனசால கூட நினைக்கமுடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாகவும் இருந்தது. இப்போ முடியலியேடா...எனக்கு உன் நிலைமையும் புரியறது. நீ பிள்ளையும் குட்டியுமா வாழறவன் அதுகளுக்கு நாளைக்கு நல்ல காரியங்கள் நடக்கணும்....எனக்குப் புரியறது....அவளும் புரிஞ்சுதானே எழுதியிருக்கா..உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு வேணாமுன்னிட்டா ஆனா டேய் கணேசா...என்னை மன்னிச்சிக்கோடா எனக்கு அவ வேணும்..அவதாண்டா வேணும்.. எனக்கும் இனி என்ன வேண்டியிருக்கு. என் சாஸ்திரம் என்னோடயே இருந்து இந்தக் கட்டையோட எரியும். அதனாலே நீங்க நன்னா இருங்கோ. நான் போறன்.  கீதாவோடேயே போயிடறேன்!

அ)கௌரிப்பாட்டி கீதா உறவின் ஆழத்தை விளக்குக.
ஆ) கைம்மை நோன்பில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்காட்டுக.
இ) கௌரிப்பாட்டியின் காலமாற்றத் தெளிவு
ஈ) ஆசிரியரின் மொழிநடை

                                                பகுதி II

3. வினைசெயல்வகை என்ற அதிகாரத்தில்
(அ) பொதுவகையால் வினைசெய்யும் திறம்
(ஆ) மூவகை நிலைகளும் அவற்றுள் வலியதன் சிறப்பும்
(இ) வலியான் , ஒப்பான் ஆகியோர் வினைசெய்யும் திறம்
ஈ) உவமை அணிப் பயன்பாடு ஆகியவற்றை விளக்குக.

4. தசரதன் கைகேயியின் கால்களில் விழுந்தது முதல் அவளுக்கு வரத்தைக் கொடுத்தது வரையான பகுதியில் ,
அ) தசரதன் இரத்தலும் கைகேயி மறுத்தலும்
ஆ) தசரதனின் பெருமையும் துன்பமும்
இ) கைகேயியின் கயமைகள்
உ) உவமை அணிகள் ஆகியவற்றை விளக்குக.

5. வீரமாமுனிவரின் தேம்பாவணி பைதிரம் நீங்குபடலத்தில் வானவர்களின் செயற்பாடுகள் வரையான பகுதியை அடிப்படையாகக் கொண்டு,
அ) மரியாளினதும் சூசையப்பரினதும்  பெருமைகள்
ஆ) மரியாளினதும் சூசையப்பரினதும் துன்பங்கள்
இ)யேசுபாலனின் மகிமைகள்
ஈ) உவமை அணிப்பயன்பாடு ; ஆகியவற்றை விளக்குக.

6. தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் தமிழ்ச்செல்வாக்கு என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு,
அ) தமிழக பக்தி இலக்கியங்கள் தொலைகிழக்கு நாடுகளில் அடைந்துள்ள செல்வாக்கு
ஆ) தமிழகத்தின் அரசியல் பொருளாதார வலிமை தொலைகிழக்கு நாடுகளில் ஏற்படுத்திய பாதிப்பு
 இ) இலங்கையில் தொன்று தொட்டிருக்கும் தமிழின் செல்வாக்கு
ஈ) ஆசிரியரின் மொழிநடை

7. செ.கணேசலிங்கனின் நீண்டபயணம் என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு,
அ) யாழ்ப்பாணப் பண்பாடு
ஆ) செல்லத்துரையனுக்கும் மாதவனுக்கும் இடையிலான  தொடர்பு நாவலில் ஏற்படுத்திய செல்வாக்கு
இ) செல்லத்துரையனுக்கும் வள்ளி  - கற்பகத்துக்கும் இடையிலான தொடர்பு
ஈ) ஆசிரியரின் புனைதிறன்

8. பின்வருவனவற்றுள் எவையேனும் இரண்டினை விளக்குக.
அ) சீறாப்புராணத்தில் மழை நோக்கிய பிரார்த்தனைக்கான சூழ்நிலை
ஆ)என் இறைவன் கவிதையில் இறைவனின் பெருமைகள்
இ) ஒளி சிறுகதை குத்துவிளக்கான தன் மகளைக் குலவிளக்காக மாற்றுவதற்கான போராட்டம் என்பதை விளக்குக.
ஈ) பூக்காரி என்ற கவிதையின் பேசுபொருளும் அதன் எடுத்துரைப்புத் தனித்துவங்களும்





ஞாயிறு, 5 டிசம்பர், 2010

புதிய புத்தகம்



க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக என்னால் வெளியிடப்பட்ட தமிழ்ச்சிறுகதைகள் - புலமையாளர்களின் விமர்சனங்களுடன்.  என்ற புத்தகம் வெளிவந்து ஒரு மாதகாலத்திற்குள்ளேயே விற்றுத்தீர்ந்துவிட்டது.. வலைத்தள வாசகர்களுக்காக விரைவில் இந்நுால் இத்தளத்திலும் வாசிக்க வசதி செய்யப்படவுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு தை மாதம் சில திருத்தங்களுடன் வெளிவருகின்றது என்பதை அறியத்தருகின்றேன்...

சனி, 14 ஆகஸ்ட், 2010

வாழ்த்துக்கள்


க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஞாயிறு, 13 ஜூன், 2010

மாதிரிப் பரீட்சை

முதலாம் பகுதியிலுள்ள மூன்று வினாக்களுக்கும், இரண்டாம், மூன்றாம்
பகுதிகளிலிருந்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வினாவையேனும் தெரிந்தெடுத்து மூன்று வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடை எழுதுக.

                                    பகுதி - I
1.    பின்வரும் கட்டுரைகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவுசெய்து 350 சொற்களுக்குக் குறைவுபடாமல் கட்டுரை வரைக.
    i)    பேராசிரியர் க. கைலாசபதியின் தமிழ்ப்பணிகள்
    ii)    ஈழத்தில் குழந்தை இலக்கியம்
    iii)    அறிவியற் தமிழ்
    iஎ)    இன்றைய விஞ்ஞான வியப்புகள்
    எ)    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

2.    பின்வரும் ‘அ’ உரைப்பகுதியையும் ‘ஆ’ பாடற்பகுதியையும் வாசித்து அதன் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
    (அ)    மொழிபெயர்ப்பில் இரண்டு பிரதான பிரச்சனைகள் உள்ளன.  ஒன்று கலைச்சொல்லாக்கம்.  மற்றது பிறமொழிச் சொற்களை தமிழில் எழுதுதல்.  இவை இரண்டும் மொழி வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.  இவ்விரு அம்சங்கள் பற்றியும் பாரதியிடம் திட்டவட்டமான சில கருத்துக்கள் இருந்தன.  கலைச் சொல்லாக்கத்தின் அவசியத்தை பாரதி நன்கு உணர்ந்திருந்தார்.  “கூடியவரை சாஸ்திர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால் பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோருக்கு அதிக சிரமம் இராது” என அவன் எழுதினான்.  தேசம் முழுவதிலும் கலைச் சொல்லாக்கத்தில் ஓர் ஒருமைப்பாடு விளங்கவேண்டும் என்பதும் பாரதியின் கருத்தாய் இருந்தது.  இதன் பொருட்டு சமஸ்கிருத மொழியை கலைச்சொல்லாக்கத்தின் பொது மொழியாகக் கொள்ளலாம் என்பதும் பாரதியின் கருத்தாகும்.  இதுபற்றி ‘பரிபாஷை சேகரிக்க ஓருபாயம்’ என்னும் தலைப்பில் பின்வரும் குறிப்பொன்றை பாரதி எழுதியுள்ளார்.  ‘ஸ்ரீ காசியிலே நாகரிக பிரசாரணி சபையார் ஐரோப்பிய சங்கேதங்களை எல்லாம் எளிய சமஸ்கிருத பதங்களில் போட்டு மிகப்பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள்.  இந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம்.  ஐரோப்பாவில் எல்லாப் பாஷைகளும் இவ்விதமாகவே இலத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன.  இவ்வாறு செய்தால் நமது தேச பாஷைகளில் சங்கேத ஒற்றுமை ஏற்படும்.  அதனால் சாஸ்திரப் பயிர் தேசம் முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்’ என்பது பாரதி கருத்து.
        i)    மேற்படி பந்தியில் ஆசிரியர் கூறியவற்றை 30 சொற்களுக்குள் சுருக்கியெழுதுக.
        ii)    மேற்படி பந்தி மூலம் ஆசிரியர் கூறவந்த விடயம் என்ன?
        iii)    பாரதியின் கலைச் சொல்லாக்கம் பற்றிய நிலைப்பாடு யாது?
    (ஆ)     ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
        மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டா
                “நமக்கும் அது வழியே நாம் போம் அளவும்
        எமக்கும் என்” என்று இட்டு உண்டு இரும்
        i)     மேற்படி செய்யுளிள் கருத்தை 30 சொற்களுக்கு குறையாமல் விரித்து எழுதுக.
        ii)    “நமக்கும் அது வழியே” என்பதன் அர்த்தம் என்ன?
        iii)    இச்செய்யுள் மூலம் ஆசிரியர் புலப்படுத்த விரும்புவது யாது?

3.      மேல்வரும் பதினைந்து வினாக்களுக்கும் (அ), (ஆ), (இ) என மூன்று பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பகுதியிலுமிருந்து குறைந்தது இரண்டு வினாக்களையேனும் தெரிந்து எல்லாமாகப் பத்து வினாக்களுக்கு மட்டும் விடைதருக.
    (அ)    i)     பாவம், மஞ்சள், பயிற்சி, சபை, கஞ்சி, தேர்ச்சி, மச்சம் ஆகிய சொற்களை சகர ஒலி வேறுபாட்டிற்கேற்ப பாகுபடுத்துக.
        ii)     மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எவை?
        iii)    பனங்கிழங்கு, பதிற்றுப்பத்து ஆகிய சொற்களில் வந்துள்ள பகுபத உறுப்புகளை பிரித்து இனங்காட்டுக.
           IV)     இறந்த கால இடைநிலைகள் இரண்டும் அதற்கு உதாரணமும் தருக.
        V)    நாவலர் வீதி, சிவபெருமான், விநாயக்கடவுள், குமரக்கோட்டம் இவை எவ்வகைத் தொகைகள்?
    (ஆ)      VI)    முயல், தடு, கொடு, கல் ஆகிய வினையடிகளைக் கொண்டு புதிய பெயர்ச்சொற்களை உருவாக்குக.
        VII)     வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை. இதில் வந்துள்ள வேற்றுமை உருபு என்ன? என்ன பொருளில் வந்துள்ளது?
        VIII)    பறவைகள் எல்லாம் பறக்கும்
                 பறக்கும் தட்டைப் பறவைகள் பார்க்கும்
            இதில் வந்துள்ள பறக்கும் என்பதன் இலக்கணத் தொழிற்பாட்டை வேறுபடுத்திக் கூறுக.
             IX)      கண்ணன் பானையை உருட்டுவித்தான், அப்பா எங்களைப் படிப்பித்தார்
                 இதில் வந்துள்ளவை எவ்வகை வினைகள்?
        X)     காட்டு, வா ஆகியன முதல் வினையாகவும் துணை வினையாகவும் வரும் வகையில் ஒவ்வொரு வாக்கியம் அமைக்குக.
    (இ)     XI)     அவன்தான் என்னை இங்கே வரச் சொன்னான்
            நான்தான் அவனை யாரோடும் கதைக்கவேண்டாம் என்றேன்.
            இவற்றில் வந்துள்ள “தான்” என்பதன் இலக்கணத் தொழிற்பாட்டினை வேறுபடுத்துக.
        XII)     காஞ்சிவரம் திரைப்படத்தினைப் பார்க்குமாறு ஆசிரியர் எனக்குக் கூறினார்.
            இதில் வந்துள்ள தலைமை வாக்கியம் எது?
        XIII)     ஒரு இரவிலேயே நான் எல்லாவற்றையும் படித்து முடிப்பேன் . இதில் வந்துள்ள இலக்கண வழுவைத் திருத்தி எழுதுக.
             XIV)     இரண்டு கண்களும் சிவந்தது. இதில் வந்துள்ள இலக்கண வழுவைச் சுட்டுக.
        XV)     கலப்பு வாக்கியத்திற்கு ஓர் உதாரணம் தருக.

                                  பகுதி - II

4.     (அ)    சங்ககாலத்தில் தோன்றிய ஆற்றுப்படை உருவ, உள்ளடக்க ரீதியில் அக்காலத்திலேயே வளர்ச்சி அடைந்த ஆற்றினை விளக்குக.
    (ஆ)     சங்ககாலத்தில் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையே மிகுந்த நல்லுறவு இருந்தது என்பதனை ஆதாரங்களுடன் விளக்குக.

5.     (அ)     நாயக்கர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை வகைப்படுத்தித் தருக.
    (ஆ)     அக்காலத்துப் பொதுமக்கள் சார்ந்த இலக்கியங்களின் பொதுப்பண்புகளை விளக்குக.

6.     (அ)     ஐரோப்பியர்களின் வருகையினால் எமது மொழியில் ஏற்பட்ட மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் விளக்குக.
    (ஆ)     அதில் அந்நாட்டு அறிஞர்களின் பங்களிப்பைச் சுருக்கமாகத் தருக.

பகுதி - ஐஐஐ
7.     (அ)    ஆரிய சக்கரவர்த்திகள் கால இலக்கியங்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக.
    (ஆ)  அக்கால இலக்கிய வளர்ச்சியில் அரசகேசரி போன்ற மன்னர்களின் பங்களிப்பை விளக்குக.

8.     (அ)    18 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய இலக்கியங்களை வகைப்படுத்தித் தருக.
        (ஆ)     ஈழத்தில் தோன்றிய புராணங்கள் பற்றிக் கருத்துரைக்குக. 

9.     மேல்வருவோருள் யாரேனும் இருவர் இலங்கைத் தமிழ் இலக்கியவளர்ச்சியில் பெறும் முக்கியத்தவத்தை விளக்குக.
    i)    பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை    
         ii)    நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
    iii)    யாழ்ப்பாணம் பதுறுத்தீன் புலவர்   
        IV)    சி.வை. தாமோதரம்பிள்ளை
    V)    புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை

மாதிரிப் பரீட்சை

        
                                         பகுதி 1

முதலாம் பகுதியில் இரு வினாக்களுக்கும் இரண்டாம் பகுதியில் உள்ளவற்றில் எவையேனும்
நான்கு வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடைதருக.
1.    பின்வரும் செய்யுட் பகுதியில் உள்ள எவையேனும் மூன்றினைத் தெரிவுசெய்து
    அ)     அவற்றின் பொருளை இக்கால உரைநடையில் எழுதுக.
    ஆ)     தடித்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளவற்றின் சிறப்பினை எழுதுக.
    1.    உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்
        அமிழ்த மியைவ   தாயினு மினிதென
        தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
        துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப்
        புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்
        உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்
        அன்ன மாட்சி அனைய ராகித்
        தமக்கென முயலா நோன்றாட்
        பிறர்க்கென முயலுன ருண்மையானே

    2.     அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடைந்து
        சால்பூ ன்றிய தூண்
        சால்பிற்கு கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார்
        கண்ணுங் கொளல்
        தொல்வரவுந் தோலங் கெடுக்கும் தொகையாக
        நல்குரவு என்னும் நசை
        இன்மையென ஒரு பாவி மறுமையும்
        இம்மையும் இன்றி வரும்

    3.     கந்தமும் தவத்தோர் கதிகளும் நிறைந்து
            கடல் வளை புவி தொடாது உயர்ந்து
        தந்த வெண்பிறை பாந்தளும் வரிப்புலியும்
            தாழ்ந்து பாதலம் கடந்து உருவி
        அந்தரம் அவனி கதிர்மதி அமைத்தோன்
            அறுசினில் கபுசொடு நடந்து
        சுந்தரம் குலவு முஸ்தபா சரணம்
            தொடும் இரு கைகளே கைகள்

    4.    எய்திய வேலையிற் தமியள் எய்திய
        தையலை நோக்கினன் சாலை நோக்கி;னான்
        கைகளில் கண்மலர் புடைத்துக் கால்மிசை
        ஐயன் அப்பரதன் விழுந்தர ற்றினானரோ

        வெந்துயர் தொடர்தர விம்மி விம்மி நீ
        ருந்திய நிரந்தர மூற்று மாறில
        சிந்திய குரிசிலச் செம்மல் சேந்த கண்
        ணிந்தியங் களிலெறி கடலுண் டென்னவே

2.     ~அ| பகுதியிலுள்ள கவிதையைப் படித்து அதன் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
அல்லது
    ‘ஆ’ பகுதியிலுள்ள உரைப்பகுதியை வாசித்து அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடைதருக.

    அ)    முள்ளுடைச் சிறு செடியின் - கனவாய்
            மூண்டு சிரித்த மலர்
        கள்ளெனும் பொக்கிஷத்தால் - விம்மியே
            கர்வம் அடைந்த மலர்
        பனித்துளி மணி சூடித் - தென்றலின்
            பாட்டினைக் கேட்ட மலர்
        கனிந்துள விண்ணதன் கீழ் - மௌனக்
            கல்வியைக் கற்ற மலர்

        அந்திச் சிவப்பினையும் - விண்மீன்
            அழகின் விழிப்பினையும்
        சிந்தையிற் கொண்ட மலர்- மணமே
            செய்து திளைத்த மலர்

        வீழ்ந்து கிடக்குதையோ - உச்சி
            வெயிற் சுடலையிலே
        வாழ்வின் விருப்பங்களை - மண்ணிலே
            வரைந்துளNதூ வண்டே?

    1.     உதிர்வதன்முன் மலர் இருந்த நிலையைக் கவிஞர் எப்படியெல்லாம் கூறுகின்றார்?
    2.     உதிர்ந்த மலர் கவிஞரின் உள்ளத்தில் உண்டாக்கும் உணர்ச்சியை விளக்குக.
    3.     இக்கதையூடாக கவிஞர் கூறவந்த விடயத்தை விளக்குக.

    ஆ)    அதோ வெண்கலத்தோணியில் ஒரு பெண் பேசுவது கேட்கிறதே. அது யாரது? அந்தப் புடவைக் கட்டிலிருந்தும் பாய்ச்சல் நடையிலிருந்தும் நாகம்மாளாகத்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துக்கொண்டிருப்பீர்கள். ஆமாம் நாகம்மாள்தான். சுழிக்கும் மின்னல் போல அங்குமிங்கும் திரிந்து கொண்டிருக்கிறாள். சற்றைக்கொரு தரம் ராமாயியிடம் வந்து கல்லை சரியாகத் தள்ளிவை. கரண்டியை அந்தப்பக்கம் வைக்காதே. குழந்தையைப் பார்த்துக்கொள், அடுப்பண்டையைப் போகப்போகுது: ராமாயிக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கஸ்டப்பட்டு கஸாயம் குடிப்பதைப்போல பொறுமையுடன் ஏற்றுக்கொண்டாள். சிலசமயம் தனக்கே இதெல்லாம் தெரியும் என்பாள்.  உடனே நாகம்மாளுக்குப் பிரமாதமாகக் கோபம் வந்துவிடும்! அப்படியோ, இதோ நான் போய்விடுகிறேன் என்று நாலு எட்டு வைத்துவிட்டு திரும்பி., உனக்காக நான் போய்விட்டால் பின்னே என்ன இருக்கிறது? என்று நின்று கொண்டு உருட்டி விழிப்பாள். அங்கு கடல் ஒலிபோல் முழங்கும் அத்தனை கதம்பக் குரல்களையும்  ராமாயியினால் சகித்துக்கொண்டு சந்தோசமாகப் பார்க்கமுடிந்தது. ஆனால் கெட்டியப்பன் அங்கு செய்யும் அட்டகாசங்களைக் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. காட்டுராஜா போல் கண்களை எதற்கு அவ்வளவு சிவப்பாக்கிக் கொண்டிருந்தானோ? பெரும் காற்றைப்போல் கும்பலில் அங்கும் இங்கென்று அலைந்து கொண்டிருந்தான். ஒரு கடைக்காரனை அந்த இடத்தில் சாமான் விற்கக்கூடாதென்பான்.  ஒரு புறமாயிருக்கும் தோரணத்தை அறுத்துவிடுவான். எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒரு சக்கிலிப்பெண் கல் அடுப்பு கட்டி அப்போதுதான் நெருப்பு மூட்டுவாள்.  அதை அவன் காலால் தெரியாததுபோல் மிதித்துவிட்டுச் செல்வான்.  ராமாயி இதையெல்லாம் பார்த்து பேசாமல் இருப்பாள்.
        1.    இப்பகுதி மூலம் வெளிப்படும் நாகம்மாளின் பண்புகளைக் குறிப்பிடுக.
        2.    கெட்டியப்பன் பற்றி உம் மனதில் தோன்றுவதைக் குறிப்பிடுக.
        3.    ஆசிரியரின் மொழிநடைச் சிறப்புப் பற்றி கருத்துரைக்க.

                                       பகுதி – ii

3.    நாணுடைமை என்னும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு
    அ)    நாணினது இலக்கணமும் சிறப்பும்
    ஆ)    நாணுடையாரது சிறப்பும் அவர் செயலும்
    இ)    நாணில்லாரது இழிவு
    ஈ)    வள்ளுவரின் உவமையணி ஆற்றல்

4.    திருவடிசூட்டுப் படலத்தில் தசரதன் இறந்த செய்தியை அறிந்தது முதல் நீர்க்கடன் செய்தது வரையான பகுதியை அடிப்படையாகக் கொண்டு
    அ)    தசரதனிடத்து இராமன் கொண்டிருந்த பாசம்
    ஆ)    தசரதனின் பெருமை
    இ)    சூரியகுலப் பெருமை
    ஆகியவற்றை விளக்குக.

5.    கலிங்கத்துப்பரணியிலுள்ள காடு பாடியது என்ற பகுதியில் வெளிப்படும்
    அ)    மரஞ்செடி கொடிகள் பற்றிய வர்ணனை
    ஆ)    வெம்மையினை வெளிப்படுத்த கையாண்ட அணிகள்
    இ)    குலோத்துங்க சோழனின் வீரம்
    ஆகியவற்றை விளக்குக.

6.    ஏ. என். சிவராமனின் ~பிணைக்கப்பட்ட கடனைவிட வெளி முதலீட்டை வரவேற்பதே நலம்| என்ற கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு
    அ)    வெளியார் முதலீடு என்ற பதம் குறிக்கும் இரண்டு கருத்துநிலைகள் எவை?  அவற்றிற்கிடை         யிலான பிரதான வேறுபாடுகள் எவை?
    ஆ)    வெளி முதலீட்டை வரவேற்பது நலமானது என்பதற்கு ஆசிரியர் கூறும் காரணங்கள்?
    இ)    வெளி முதலீட்டால் வரக்கூடிய தீமைகள்?
    ஈ)    தனது கருத்தை வெளிப்படுத்த ஆசிரியர் கையாண்ட மொழிநடை
    ஆகியவற்றை விளக்குக.

7.    மகாகவி பாரதியாரின் ~எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி| எனத் தொடங்கும் கவிதையிலும் ~வாழ்க நீ எம்மால்| எனத் தொடங்கும் கவிதையிலும் பாரதியாரின்,
    அ)    நாட்டுப்பற்றுக்கான காரணங்களையும்
    ஆ)    மகாத்மா காந்தி மேல் அவர் கொண்ட மதிப்பிற்கான காரணங்களையும்
    இனங்காண்க.

8.    ஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையை ஆதாரமாகக் கொண்டு
    அ)    கதைத் தலைப்பின் பொருத்தப்பாடு
    ஆ)    முருகதாசரின் எழுத்துலகக் கனவும் அதற்கு நேர்ந்த கதியும்
    இ)    அலமு என்ற பாத்திரத்தின் முக்கியத்துவம்
    ஈ)    குடியிருந்த வீடு
    உ)    புதுமைப் பித்தனின் கதை சொல்லும் திறன் ஆகியவற்றை சுருக்கமாக விளக்குக.

9.    பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினை விளக்குக.
    அ)    தவப்பயன் என்ற சிறுகதையில் வெளிப்படுத்தப்படும் பிரதான செய்தியை விளக்குக.
    ஆ)    தமிழும் பிறமொழியும் கட்டுரையில் கூறப்படும் தமிழுக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்குமான         தொடர்பு
    இ)    இரட்சணிய யாத்திரிக சிலுவைப்பாடு பகுதியில் இயேசுபிரான் கல்வாரி நோக்கிச் சென்றமைக்கான         காரணங்களும் அவர் பட்ட துன்பங்களும்
    ஈ)    கன்னியாய்த்திரு என்ற பாடலில் புலவர்மணியின் இயற்கை நேசமும் சமூக நோக்கும்
    உ)    மாமலர் முண்டக பாடலில் தோழியின் மதிநுட்பம்

திங்கள், 24 மே, 2010

மாதிரிப்பரீட்சை 3

முதலாம் பகுதியிலுள்ள மூன்று வினாக்களுக்கும், இரண்டாம், மூன்றாம் பகுதிகளிலிருந்துஒவ்வொன்றிலும் ஒவ்வொருவினாவையேனும் தெரிந்தெடுத்து மூன்று வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடைஎழுதுக.

பகுதி–I

1. பின்வரும் கட்டுரைகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவுசெய்து 350 சொற்களுக்குக் குறைவுபடாமல் கட்டுரைவரைக.
i) பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தமிழ்ப்பணிகள்
ii) இணையத்தில் இலக்கியம்
iii) விண்வெளிஆய்வுகள்
iஎ) நாட்டார் கூத்துக்களின் இன்றையநிலை
எ) பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுதல்


2. பின்வரும் ‘அ’ உரைப்பகுதியையும் ‘ஆ’ பாடற்பகுதியையும் வாசித்து அதன் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
(அ) இந்தியதத்துவமரபில் வந்த ஒரு கோட்பாடு சாசுவதம். சாசுவதநெறி என்பது தர்மம், நீதி,நம்பிக்கை, சமூகஅமைப்பு முதலியன சாசுவதமானவை என்பது இக் கோட்பாட்டின்முடிவு. சாசுவதம் என்றால் நித்தியம், அசையாநிலை, நிலைபேறுடைமை, மோட்சம் என்றெல்லாம் பொருள்படும். உதாரணமாக சனாதனதர்மம் சாசுவதமானது என்றே பிராமணியம் கூறும.; தத்துவக் கூறுகளைப் போலவே அவற்றுக்கு ஆதாரமான பௌதீகப் பொருளான சமுதாய அமைப்பும் சாசுவதமானது என்றே சனாதனிகள் கூறுவர். தர்மம், நீதி என்பன நித்தியமானவை, அசையாநிலைபெற்றவை என்று கூறினர். பின்பு அவற்றில் மாற்றம் என்பதற்கு இடம் ஏது? இது நிலையியற் கொள்கையாகும். சாசுவதமானது எதுவுமே இல்லை இயற்கையில் உள்ள அனைத்துமே இடையறாத இயக்கத்திற்கு உட்பட்டவை என்பது இவ்விவாதத்தின் அடிப்படை. பௌத்தம் போன்ற அவைதீகநெறிகள் இக்கொள்கையைக் கருத்துமுதல்வாத நோக்கில் முன்வைத்தன. அவற்றின் வழியாகவே இந்திய தத்துவஞானமரபில் பண்டைய இயக்கவியல் முகிழ்த்தது சாசுவதக் கோட்பாட்டின் பிடிப்பு பாரதியாரில் சிறிதளவு இருந்ததை மறுக்கமுடியாதாயினும் சமூகம், கலைகள், இலக்கியம் முதலியவற்றில் மாற்றத்தை விதியாகக் கொண்ட இயக்கவியலைப் பாரதியார் உணர்வுரீதியாக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதையும் மறுக்க இயலாது. பாரதியாரின் இறுதிக்காலத்தில் பாடப்பெற்றதாகக் கருதப்படும் “உயிர் பெற்ற தமிழர் பாட்டு” இதற்கு முழுமையான வடிவம் கொடுத்துள்ளது.

i) மேற்படிபந்தியை 30 சொற்களிற்குக் குறையாமல் சுருக்கிஎழுதுக.
ii) இயக்கவியற் கொள்கையின் முக்கியத்துவம் யாது?

(ஆ) களர் நிலத்துப் பிறந்தஉப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத் தோராயினும் கற்றறிந்தோரைத்
தலைநிலத்துவைக்கப்படும்

i) இச்செய்யுள் கூறும் கருத்தை உமது நடையில் 30 சொற்களுக்குக் குறையாமல் விரித்துஎழுதுக.
ii) இச்செய்யுள் கூறும் பிரதான செய்தி என்ன?
iii) வந்துள்ள அணியை விளக்குக.


3. மேல்வரும் பதினைந்துவினாக்களுக்கும் (அ), (ஆ), (இ) என மூன்றுபகுதிகளாகத் தரப்பட்டுள்ளன ஒவ்வொரு பகுதியிலிருந்தும் குறைந்தது இரண்டுவினாக்களையேனும் தெரிந்துஎல்லாமாகப் பத்துவினாக்களுக்குவிடைதருக.

ஐ. கவிஞன்,அகம்,காருண்யம்,கஞ்சன்,அங்கம்,காரிருள்,திகதி,பற்கள்,கண்கள் ஆகிய சொற்களை ககர ஒலி வேறுபாட்டிற்கமைய பாகுபடுத்துக.
ஐஐ. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்பதில் வந்துள்ள எழுத்துப் போலியை சுட்டி திருத்தி எழுதுக?
ஐஐஐ. அக்கா, நட்பு, அன்பு, கட்சி, செல்வம் இவற்றுள் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் இடம்பெறும் சொற்களை இனங்காணுக.
ஐஏ. பஃறொடை, அஃறிணை, முஃடீது இவற்றில் வந்துள்ள ஆய்தத்தின் மாத்திரை எத்தனை?
ஏ. பாலின் இனிய சொல், மானின் மருண்ட விழி என்பவற்றில் வந்துள்ள வேற்றுமை உருபு என்ன? என்ன பொருளில் வந்துள்ளது?

ஏஐ. மலர்மணம், வாட்கண், நானிலம், செவ்வானம், நிறைகுடம், பாலபழம் இவை எவ்வகைத் தொகைகள்?
ஏஐஐ. நீ அங்கு போகாதது நல்லது என்பதில் போகாதது என்பது எவ்வகைப் பெயர்?
ஏஐஐஐ. காலையில் எழுந்து கடவுளைத் தொழு, உலகத்தோடு ஒட்டி வாழ் இவற்றில் வந்துள்ள வினை எவ்வகை வினை?
ஐஓ. கொழும்பில் இருந்து வருவோர் யாழ்ப்பாணத்தில் அரிய காட்சிகளைக் காண்பர். இதில் வருவோர் என்பது எவ்வகைப் பெயர்?
ஓ. ஆசிரியர் எழுதித் தரச்சொன்னார், நீ இப்படிப் போனால் உருப்படமாட்டாய். இவற்றில் வந்துள்ள எச்சம் எவ்வகையினது?

ஓஐ. நீங்கள் இங்கே வரவேண்டாம், நான் எப்போதாவது சிரிப்பேன், நீங்கள் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது இவற்றில் வந்துள்ள அடைகள் எவ்வகை? என்ன பொருள்களி;ல் வந்துள்ளன?
ஓஐஐ. நீங்களாவது என்னுடைய சொல்லைக் கேட்பீர்களா? இதில் வந்துள்ள இடைச்சொல்? என்ன பொருளில் வந்துள்ளது?
ஓஐஐஐ. நான் நேற்று அப்பம் சாப்பிட்டேன், அப்பம் ருசியாக இருந்தது. முதல் வாக்கியத்தைப் பெயரெச்சத் தொடராக மாற்றி இரண்டாவது வாக்கியத்துடன் இணைக்கவும்.
ஓஐஏ. அவர் பிரபலமான நீரிழிவு வைத்தியர். இதில் வந்துள்ள பொருள் மயக்கத்தைச் சுட்டுக.
ஓஏ. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் நல்லூரிலே அவதரித்தார். இதில் வந்துள்ள இலக்கண வழுவைச் சுட்டித் திருத்தி எழுதுக.

பகுதி ஐஐ

4. அ) அகத்திணை, புறத்திணை என்கின்ற பாகுபாட்டிற்கான அடிப்படைகளை விளக்குக.
ஆ) சங்ககாலப் பாடாண்திணை மரபு பிற்காலங்களில் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதனை ஆதாரங்களுடன் விளக்குக.

5. அ) பல்லவர் கால பக்தி இலக்கியச் செழுமைக்கு முற்காலம் எவ்வாறு வழிகாட்டியாய் அமைந்தது என்பதனை ஆதாரங்களுடன் விளக்குக.
ஆ) பொற்கால இலக்கியங்களில் இருந்து நாயக்கர் கால இலக்கியங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதனை விளக்குக.

6. அ) 20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நாவலின் வளர்ச்சியைக் குறிப்பிடுக.
ஆ) இதில் கல்கி அல்லது தி.ஜானகிராமன் பெறும் இடத்தினை மதிப்பிடுக.

பகுதி ஐஐஐ

7. அ) போர்த்துக்கேயர் கால இலக்கியங்கள் பற்றிக் கருத்துரைக்குக.
ஆ) ஒல்லாந்தர் காலத்தில் வரதபண்டிதரின் இடத்தினை விளக்குக.

8. அ) 19 ஆம் நூற்றாண்டின் செய்யுள் இலக்கியப் போக்கினை விளக்குக.
ஆ) இதில் ஈழத்திற்குரியவர்களின் முன்னோடி முயற்சிகளை விளக்குக.


9. மேல்வருவோருள் யாரேனும் இருவர் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெறும் இடத்தினை மதிப்பிடுக.
அ) சுபைர் இளங்கீரன்
ஆ) இணுவில் சின்னத்தம்பிப் புலவர்
இ) மஹாகவி
ஈ) வித்துவசிரோன்மணி சி.கணேசையர்
உ) பண்டிதர் க. சச்சிதானந்தன்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

க.பொ.த( உ/த) தமிழ் மாதிரி வினாத்தாள் 1

முதலாம் பகுதி இரு வினாக்களுக்கும் இரண்டாம் பகுதியில் உள்ளவற்றில் எவையேனும் நான்கு வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடை தருக.
பகுதி 1


01. பின்வரும் செய்யுட் பகுதியில் உள்ள எவையேனும் முன்றினைத் தெரிவு செய்து
அ) அவற்றின் பொருளை இக்கால உரைநடையில் எழுதுக.
ஆ) தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளவற்றின் சிறப்பினை எழுதுக.

1. கரை பொரு திழிதருங் கான் யாற்றிகுகரை
வேர்கிளர் மராஅத் தந்தளிர் போல
நடுங்கலானா நெஞ்ச மோடிடும்பை
யாங்கனந் தாங்குவன் மற்றே ஓங்குசெலற்
கடும்பகட்டு யானை நெடுமானஞ்சி
ஈரநெஞ்ச மோடிச் சேண் விளங்க
தேர் வீசிருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே

2.ஒருமை மகளிரைப் போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.
பெருமையுடையவ ராற்றுவா ராற்றி
னருமை யுடைய செயல்.
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்.
இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்
சீரல்லவர் கட்படின்.

3. இருகதி குறுவான் அதையும் உன்னிடமே
இறக்குவன் உனைப் பரிபாலித்து
அருளவும் வணங்கித் துதிக்கவும் மிகுந்தோர்
தமை யமைத்து அருள்வன் அன்பு ஓங்கி
பெருகு பார்ப்பு அதனைத் Nதுடி வந்து அடையும்
பறவை போல் பிள்ளையைத் தேடி
வரும் அனையினைப் போல் எனது கல்க்குகள் உன்
மாட்டினில் வருகவும் புரிவேன்

4. கொம்பி நின்று நுடங்குறு கொள்கையார்
செம்பொ னின்கல ராசி திருத்தினா
ரம்ப ரத்தி னரம்பைய ரன்பொடு
மும்பர் கோனுக ரின்னமிழ் தூட்டினார்

அஞ்ச டுத்த வமளி யலத்தகப்
பஞ்ச டுத்த பரிபுரப் பல்லவ
நஞ்ச டுத்த நயனியர் நவ்வியிற்
றுஞ்ச வத்தனை மைந்தருந் துஞ்சினார்



02. ‘அ’ பகுதியிலுள்ள கவிதையை வாசித்து அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை தருக

அல்லது

‘ஆ’ பகுதியிலுள்ள உரைப்பகுதியை வாசித்து அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை தருக.
(அ)

இனிதான கனிய ளிக்கும்
இன்னிழல் மரங்கள் ஆங்கு
கனி பிழிந்தன்ன ஓசைக்
கடலலை நல்கும் புட்கள்
பனிதங்கு புல்லி னோடு
மாமிசம் உண்ணும் மாக்கள்
நனி எழிலோடு மின்னும்
நாகங்கள் யாவினுள்ளும்
மனிதா, நீ யார் இம்மண்ணில்
மதிப்புள்ள ஜந்து நீயா

ஓதிய மறைகள் உன்னை
உயர்ந்தவன் என மொழிந்தே
தோதாகி உலகும் உன்றன்
சுகத்திற்கு வளையுமென்னும்
பாதார விந்தம் சென்னி
பணித்திடும் சிருஷ்டி ! நல்ல
ஆதாரம் அமரர் உந்தன்
அடியினைக் கௌரவித்தார்
மனிதா நீ யார் இந்த மண்ணின்
மதிப்புள்ள ஜந்து நீயா

ஆந்தையின் அலறலுக்கும்
அர்த்தம் நீ காணுகின்றாய்
சேர்ந்த ஓர் காகம் கத்த
சிந்தையை இழப்பாய் பூனை
பாய்ந்திடிற் பயந்து போவாய்
பல்லியின் நச்சொலிக்கே
மாய்ந்திடுவாய் உனக்கே
இவையெல்லாம் உயர்ந்ததாயின்
மனிதா நீயார்? இம்மண்ணின்
மதிப்புள்ள ஜந்து நீயா?

சிங்கத்தின் கர்ச்சனைக்கும்
சிறுத்தையின் உறுமலுக்கும்
தும்பியின் பிளிறலுக்கும்
சீறிடும் பாம்பினுக்கும்
தங்கு நீர் முதலைகட்கும்
தாங்குமோ உயிர் என்றிங்கு
வந்தித்து வாழுகின்றாய்
மறையினால் உயர்வு கண்டாய் !
மனிதா நீயார்? இம்மண்ணின்
மதிப்புள்ள ஜந்து நீயா?

காற்றிற்கும் பனிக்கும் நீலக்
கடலுக்கும் இடி மழைக்கும்
தோற்றிடு விசும்பினுக்கும்
தொல்புகழ் பூமித் தாய்க்கும்
ஆற்றாமல் அழிகின்றாய் உன்
அறிவுக்குள் அடக்காய் நீயோர்
நாற்றுக்குள் முளையதனால்
நானிலம் பெருமை பேசும் !
மனிதா, நீயார் ? இம்மண்ணின்
மதிப்புள்ள ஜந்து நீயா?
1. இக்கவிதை மூலம் ஆசிரியர் புலப்படுத்த விரும்பிய பிரதான கருத்து என்ன?
2.மனிதன் எவை எவற்றுக்குப் பயப்படுவதாக ஆசிரியர் கூறுகிறார்?
3. மனிதன் எப்படி இருக்கவேண்டும் என ஆசிரியர் கருதுகின்றார்?
4. ‘நாற்றுக்குள் முளையதனால் நானிலம் பெருமை பேசும் ‘ எனபதன் மூலம் ஆசிரியர் எதை எணர்த்துகிறார்?


(ஆ)
அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. யுhனை மெல்ல அசைந்து நடந்து வருவதைப் போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றம். இளம் தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும்இ பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையிலே உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரைப் பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குரிய பூரிப்பு இல்லை. ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம்முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.
அவருடைய நடையில் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை.: சோம்பலும் இல்லை. படபடப்பும் இல்லை: சோர்வும் இல்லை. அவர் மார்பில் ருத்திராட்ச கண்டி விளங்கியது.

1. புலவர் பெருமான் தொடர்பாக உமக்குள் ஏற்படும் பதிவுகள் எவை?
2. அவரைப் பற்றிக் குறிப்பிடும் மாணவர் பற்றி நீர் யாது கருதுகின்றீர்?
3. ஆசிரியரின் மொழிநடைச்சிறப்புப் பற்றிக் கருத்துரைக்குக.

பகுதி 11
03. குடி செயல்வகை என்னும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ,
அ) குடிசெயல் என்றால் என்னவென்பதும் அதற்குக் காரணமாவதும் துணையாவதும்
ஆ) குடிசெய்வார் எய்துஞ் சிறப்பு
இ) குடிசெய்வார் அதனைச் செய்யும் இயல்பும் அவர் இல்லாத குடிக்கு ஏற்படும் கதியும்
04. திருவடி சூட்டுப்படலத்தில் இராமன் இருக்கும் இடத்தை பரதன் அடைவது வரையான பகுதியில்
அ) இராமன் மீது பரதன் கொண்ட பாசமும்
ஆ) பரதன் மீது இராமன் கொண்ட நம்பிக்கையும்
இ) படைகளைக் கண்ட இலக்குவனின் கோபமும்
புலப்படுமாற்றினை விளக்குக.

05. இரட்சணிய யாத்திரிகம் சிலுவைப்பாடு பகுதியில்,
அ) யேசு பிரான் அடைந்த துன்பங்களும்
ஆ) அதைக்கண்டு பெண்கள் அடைந்த துன்பங்களையும்
இ) இவற்றை வெளிப்படுத்த புலவர் கையாண்ட அணிகளின் சிறப்பையும் விளக்குக.

06. திருத்தொண்டர் பெரிய புராண வசனம் முகவுரை என்ற கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு
அ) சைவர்கள் என்பதற்கு நாவலர் கூறும் வரைவிலக்கணம்
ஆ) திருத்தொண்டர் பெரியபுராணத்தின் சிறப்புகள்
இ) அதனைக் கற்க வேண்டியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
ஈ) நாவலரின் மொழிநடை ஆகியவற்றை விளக்குக.

07. பாற்கஞ்சி என்ற சிறுகதையை ஆதாரமாகக் கொண்டு,
அ) சாதாரண விவசாயக் குடும்பத்தின் ஆசாபாசங்களையும்
ஆ) அவர்களின் எதிர்பார்ப்புகள் நொருங்குதலையும்
இ) இக்கதைத் தலைப்பின் பொருத்தப்பாட்டையும்
ஈ) இச்சிறுகதையில் வெளிப்படும் கிராமிய பண்பாடுகளையும்
வுpளக்குக.

08. பாரதியாரின் உயிர் பெற்ற தமிழர் பாட்டு என்ற கவிதையை ஆதாரமாகக் கொண்டு, பாரதியாரின்
அ) சமூக சிந்தனைகளையும்
ஆ) வாழ்க்கை நோக்கையும்
இ) நூல்கள பற்றிய எண்ணத்தையும் விளக்குக

09. பின்வருவனவற்றுள் மூன்றினை விளக்குக.
அ) ஊர்க்கால் நிவந்த பாடல் பகுதி மூலம் வெளிப்படும் கைக்கிளைக் கூறுகள்
ஆ) நாச்சியார் திருமொழி பகுதியில் வெளிப்படும் ஆண்டாளின் காதல்
இ) தவப்பயன் சிறுகதையில் வெளிப்படும் நிர்மலானந்தரின் துறவு நிலை
ஈ) பிணைக்கப்பட்ட கடனை விட வெளி முதலீட்டை வரவேற்பதே நலம் கட்டுரையில் பிணைக்கப்பட்ட கடன், வெளி முதலீடு என்பதற்கான விளக்கம்
உ) பெட்டிக்கடை நாரணன் கவிதையில் நாரணன் பற்றி உம் மனதில் எழுவன.