*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமார் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொகுத்த சிறுகதைத்தொகுதி வெளிவந்துவிட்டது விலை 240 ரூபாய்.தருமராசா அஜந்தகுமார் உயர்தரமாணவர்களுக்காய்த் தொகுக்கும் உரைநடைக்கோவை விரைவில் வெளிவருகிறது *

ஞாயிறு, 13 ஜூன், 2010

மாதிரிப் பரீட்சை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முதலாம் பகுதியிலுள்ள மூன்று வினாக்களுக்கும், இரண்டாம், மூன்றாம்
பகுதிகளிலிருந்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வினாவையேனும் தெரிந்தெடுத்து மூன்று வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடை எழுதுக.

                                    பகுதி - I
1.    பின்வரும் கட்டுரைகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவுசெய்து 350 சொற்களுக்குக் குறைவுபடாமல் கட்டுரை வரைக.
    i)    பேராசிரியர் க. கைலாசபதியின் தமிழ்ப்பணிகள்
    ii)    ஈழத்தில் குழந்தை இலக்கியம்
    iii)    அறிவியற் தமிழ்
    iஎ)    இன்றைய விஞ்ஞான வியப்புகள்
    எ)    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

2.    பின்வரும் ‘அ’ உரைப்பகுதியையும் ‘ஆ’ பாடற்பகுதியையும் வாசித்து அதன் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
    (அ)    மொழிபெயர்ப்பில் இரண்டு பிரதான பிரச்சனைகள் உள்ளன.  ஒன்று கலைச்சொல்லாக்கம்.  மற்றது பிறமொழிச் சொற்களை தமிழில் எழுதுதல்.  இவை இரண்டும் மொழி வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.  இவ்விரு அம்சங்கள் பற்றியும் பாரதியிடம் திட்டவட்டமான சில கருத்துக்கள் இருந்தன.  கலைச் சொல்லாக்கத்தின் அவசியத்தை பாரதி நன்கு உணர்ந்திருந்தார்.  “கூடியவரை சாஸ்திர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால் பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோருக்கு அதிக சிரமம் இராது” என அவன் எழுதினான்.  தேசம் முழுவதிலும் கலைச் சொல்லாக்கத்தில் ஓர் ஒருமைப்பாடு விளங்கவேண்டும் என்பதும் பாரதியின் கருத்தாய் இருந்தது.  இதன் பொருட்டு சமஸ்கிருத மொழியை கலைச்சொல்லாக்கத்தின் பொது மொழியாகக் கொள்ளலாம் என்பதும் பாரதியின் கருத்தாகும்.  இதுபற்றி ‘பரிபாஷை சேகரிக்க ஓருபாயம்’ என்னும் தலைப்பில் பின்வரும் குறிப்பொன்றை பாரதி எழுதியுள்ளார்.  ‘ஸ்ரீ காசியிலே நாகரிக பிரசாரணி சபையார் ஐரோப்பிய சங்கேதங்களை எல்லாம் எளிய சமஸ்கிருத பதங்களில் போட்டு மிகப்பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள்.  இந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம்.  ஐரோப்பாவில் எல்லாப் பாஷைகளும் இவ்விதமாகவே இலத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன.  இவ்வாறு செய்தால் நமது தேச பாஷைகளில் சங்கேத ஒற்றுமை ஏற்படும்.  அதனால் சாஸ்திரப் பயிர் தேசம் முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்’ என்பது பாரதி கருத்து.
        i)    மேற்படி பந்தியில் ஆசிரியர் கூறியவற்றை 30 சொற்களுக்குள் சுருக்கியெழுதுக.
        ii)    மேற்படி பந்தி மூலம் ஆசிரியர் கூறவந்த விடயம் என்ன?
        iii)    பாரதியின் கலைச் சொல்லாக்கம் பற்றிய நிலைப்பாடு யாது?
    (ஆ)     ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
        மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டா
                “நமக்கும் அது வழியே நாம் போம் அளவும்
        எமக்கும் என்” என்று இட்டு உண்டு இரும்
        i)     மேற்படி செய்யுளிள் கருத்தை 30 சொற்களுக்கு குறையாமல் விரித்து எழுதுக.
        ii)    “நமக்கும் அது வழியே” என்பதன் அர்த்தம் என்ன?
        iii)    இச்செய்யுள் மூலம் ஆசிரியர் புலப்படுத்த விரும்புவது யாது?

3.      மேல்வரும் பதினைந்து வினாக்களுக்கும் (அ), (ஆ), (இ) என மூன்று பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பகுதியிலுமிருந்து குறைந்தது இரண்டு வினாக்களையேனும் தெரிந்து எல்லாமாகப் பத்து வினாக்களுக்கு மட்டும் விடைதருக.
    (அ)    i)     பாவம், மஞ்சள், பயிற்சி, சபை, கஞ்சி, தேர்ச்சி, மச்சம் ஆகிய சொற்களை சகர ஒலி வேறுபாட்டிற்கேற்ப பாகுபடுத்துக.
        ii)     மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எவை?
        iii)    பனங்கிழங்கு, பதிற்றுப்பத்து ஆகிய சொற்களில் வந்துள்ள பகுபத உறுப்புகளை பிரித்து இனங்காட்டுக.
           IV)     இறந்த கால இடைநிலைகள் இரண்டும் அதற்கு உதாரணமும் தருக.
        V)    நாவலர் வீதி, சிவபெருமான், விநாயக்கடவுள், குமரக்கோட்டம் இவை எவ்வகைத் தொகைகள்?
    (ஆ)      VI)    முயல், தடு, கொடு, கல் ஆகிய வினையடிகளைக் கொண்டு புதிய பெயர்ச்சொற்களை உருவாக்குக.
        VII)     வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை. இதில் வந்துள்ள வேற்றுமை உருபு என்ன? என்ன பொருளில் வந்துள்ளது?
        VIII)    பறவைகள் எல்லாம் பறக்கும்
                 பறக்கும் தட்டைப் பறவைகள் பார்க்கும்
            இதில் வந்துள்ள பறக்கும் என்பதன் இலக்கணத் தொழிற்பாட்டை வேறுபடுத்திக் கூறுக.
             IX)      கண்ணன் பானையை உருட்டுவித்தான், அப்பா எங்களைப் படிப்பித்தார்
                 இதில் வந்துள்ளவை எவ்வகை வினைகள்?
        X)     காட்டு, வா ஆகியன முதல் வினையாகவும் துணை வினையாகவும் வரும் வகையில் ஒவ்வொரு வாக்கியம் அமைக்குக.
    (இ)     XI)     அவன்தான் என்னை இங்கே வரச் சொன்னான்
            நான்தான் அவனை யாரோடும் கதைக்கவேண்டாம் என்றேன்.
            இவற்றில் வந்துள்ள “தான்” என்பதன் இலக்கணத் தொழிற்பாட்டினை வேறுபடுத்துக.
        XII)     காஞ்சிவரம் திரைப்படத்தினைப் பார்க்குமாறு ஆசிரியர் எனக்குக் கூறினார்.
            இதில் வந்துள்ள தலைமை வாக்கியம் எது?
        XIII)     ஒரு இரவிலேயே நான் எல்லாவற்றையும் படித்து முடிப்பேன் . இதில் வந்துள்ள இலக்கண வழுவைத் திருத்தி எழுதுக.
             XIV)     இரண்டு கண்களும் சிவந்தது. இதில் வந்துள்ள இலக்கண வழுவைச் சுட்டுக.
        XV)     கலப்பு வாக்கியத்திற்கு ஓர் உதாரணம் தருக.

                                  பகுதி - II

4.     (அ)    சங்ககாலத்தில் தோன்றிய ஆற்றுப்படை உருவ, உள்ளடக்க ரீதியில் அக்காலத்திலேயே வளர்ச்சி அடைந்த ஆற்றினை விளக்குக.
    (ஆ)     சங்ககாலத்தில் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையே மிகுந்த நல்லுறவு இருந்தது என்பதனை ஆதாரங்களுடன் விளக்குக.

5.     (அ)     நாயக்கர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை வகைப்படுத்தித் தருக.
    (ஆ)     அக்காலத்துப் பொதுமக்கள் சார்ந்த இலக்கியங்களின் பொதுப்பண்புகளை விளக்குக.

6.     (அ)     ஐரோப்பியர்களின் வருகையினால் எமது மொழியில் ஏற்பட்ட மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் விளக்குக.
    (ஆ)     அதில் அந்நாட்டு அறிஞர்களின் பங்களிப்பைச் சுருக்கமாகத் தருக.

பகுதி - ஐஐஐ
7.     (அ)    ஆரிய சக்கரவர்த்திகள் கால இலக்கியங்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக.
    (ஆ)  அக்கால இலக்கிய வளர்ச்சியில் அரசகேசரி போன்ற மன்னர்களின் பங்களிப்பை விளக்குக.

8.     (அ)    18 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய இலக்கியங்களை வகைப்படுத்தித் தருக.
        (ஆ)     ஈழத்தில் தோன்றிய புராணங்கள் பற்றிக் கருத்துரைக்குக. 

9.     மேல்வருவோருள் யாரேனும் இருவர் இலங்கைத் தமிழ் இலக்கியவளர்ச்சியில் பெறும் முக்கியத்தவத்தை விளக்குக.
    i)    பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை    
         ii)    நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
    iii)    யாழ்ப்பாணம் பதுறுத்தீன் புலவர்   
        IV)    சி.வை. தாமோதரம்பிள்ளை
    V)    புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக